உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த ஜோடி ஒன்று, வித்தியாசமாகத் திருமணம் செய்ய விரும்பி உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள ஒரு சுடுகாட்டைத் தேர்வு செய்தது. சுடுகாட்டின் நடுவே சுமார் 50 விருந்தினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கலவையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
