ஹோர்முஸ் நீரிணையில் நேற்று ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்தும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பகைமை நடவடிக்கைகளுக்குப் பிறகு போர்நிறுத்தம் முடிவடைந்துவிட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இல்லை, போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை" என்று குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் 'Project Freedom' மெகாத் திட்டம் ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுபட்ட செயல்முறைகள் என்று அவர் இங்கு வலியுறுத்தினார்.
