இலங்கையை ஆதிர வைத்த மற்றொறு துயர சம்பவம்

 


புத்தளம்- வனாத்தவில்லு - தேனுவர பகுதியில் மின்சார வேலி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பன்முக சேவை ஊழியர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.3.2026) இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனாத்தவில்லு அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு ஏனைய ஊழியர்களுடன் இணைந்து காவற்பணியில் ஈடுபட்டிருந்த அவர், பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்கு முன்னர் மற்றுமொரு தேவைக்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதன்போதே அங்கிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.