சற்று முன் நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல்

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 


இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 


அதன்படி, 1954-ஆம் ஆண்டின் 19-ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் விதிகளுக்கு இணங்க, 1996.10.14 திகதியிட்ட 954/1 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட சட்டரீதியான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை எட்டாகும் என அவர் விளக்கமளித்துள்ளார். 


அந்த விடுமுறை நாட்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.