சமீபத்திய பெட்ரோலிய விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு காரணமாக திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடந்த சனிக்கிழமை முதல் அதன் விலையை உயர்த்தியிருந்தது.
கடந்த எட்டு மாதங்களில் இது இரண்டாவது எல்.பி.ஜி விலை உயர்வாக இது கருதப்படுகிறது.
பரவலாகப் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை, அரசுக்குச் சொந்தமான எல்பிஜி சில்லறை விற்பனையாளர் மற்றும் அதன் ஒரே தனியார் போட்டியாளர் ஆகிய இருவராலும் 17 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறன நகர்வுகளின் அடிப்படையில் நேற்று இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்குப் பதிலாக, உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வாராந்தம் விலைகளை மாற்றியமைக்கும் புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இது எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
.jpg)