உச்சம் தொட்ட பொருட்களின் விலை

 



இலங்கையில் கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தற்போதைய விலை நிலவரப்படி, 2,000 சதுர அடி கொண்ட (3 படுக்கையறைகள்) ஒரு சாதாரண வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 34.9 மில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது


குறித்த விடயத்தை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரிங்டன் பால் தெரிவித்துள்ளார்.


அவர் கருத்துத் தெரிவிக்கையில், இரும்பு விலையை 25,000 - 30,000 ரூபாவால் அதிகரிப்பது ஒரு 'மாஃபியா' போன்றது எனச் சாடியுள்ளார்.

மூன்று கியூப் மணலின் விலை தற்போது 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.


தற்போதைய விலை நிலவரப்படி, 2,000 சதுர அடி கொண்ட (3 படுக்கையறைகள்) ஒரு சாதாரண வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 34.9 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஓடுகள் மற்றும் அலுமினியச் சந்தையில் நிலவும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.