நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.jpeg)