மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் வலுசக்தி சவால்களை சமாளிக்கும் வகையில், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுச் சேவைகளை நிகழ்நிலையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொது சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழியில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மார்ச் 31ஆம் திகதியில் இருந்து டீசல் பயன்பாட்டை 42% வரை குறைத்துள்ளது. இது அரசு நிறுவனங்களில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மேலும், பாடசாலை மட்டத்தில் வலுசக்தி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 7 மற்றும் 9 திகதிகளில் நடத்தப்பட உள்ளன. பல்கலைக்கழகங்களும் இயன்றவரை நிகழ்நிலையில் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பாடசாலை மட்டத்தில் வலுசக்தி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 7 மற்றும் 9 திகதிகளில் நடத்தப்பட உள்ளன. பல்கலைக்கழகங்களும் இயன்றவரை நிகழ்நிலையில் செயல்பட்டு வருகின்றன.
அத்தோடு, கிராம உத்தியோகத்தர்களுக்கான நுழைவுப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு குழுவிடம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி உள்ளிட்ட பல அமைச்சுகள், அத்தியாவசிய ஊழியர்களைப் பணியமர்த்தியும் இணையவழி முறைகளைப் பயன்படுத்தியும் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
