மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

 

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான அதிகாரபூர்வ ஒன்லைன் தளத்தை ஒத்ததாக அமைக்கப்பட்ட போலி வலைத்தளங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை ஊடக சந்திப்பை நடத்தியபோது நிர்வாக பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக தவறான முறையில் தொடர்புடைய போலி வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிர்வாக பணிப்பாளர், அரசாங்கம் fuel pass.gov.lk என்ற வலைத்தளத்தை மட்டுமே பகிரங்கப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

அதன்படி, எரிபொருள் பாஸ்களைச் செயலாக்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் தெரிவித்தார்.