எரிபொருள் விலையதிகரிப்பு காரணமாக நாட்டின் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் 80 முதல் 90 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அறுவடை காலத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் ஏனைய விவசாய உபகரணங்களுக்கான சேவைக்கட்டணம் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
