பாணந்துறை - மொரட்டுவை புதிய வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, ஜய மாவத்தைக்கு அருகாமையில் நேற்று(09.03.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர் வீதியைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கொரளவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
