பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!

 


நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு பாடசாலைகளை நடத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்களை விளக்குவதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இன்று (22) இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 10-ஆம் திகதியுடன் தவணை முடிவடைய உள்ளதாகவும், அதுவரை புதன்கிழமைகளில் மட்டும் பாடசாலைகள் நடத்தப்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், முடிந்தவரை வாரம் முழுவதும் 4 நாட்களும் பாடசாலை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.