கடந்த 24 மணி நேரத்தில் உலகை அதிர வைத்த சம்பவம்

 


குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 6 ஆளில்லா வானூர்திகளை கடந்த 24 மணிநேரத்திற்குள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக குவைத் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் குவைத் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் தேசிய படையின் பொறுப்பின் கீழ் உள்ள பகுதிகளில் இந்த 6 ஆளில்லா வானூர்திகள்; அடையாளம் காணப்பட்டு, வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், முக்கிய மூலோபாயக் கட்டமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிகேடியர் ஜெனரல் ஜடான் ஃபாதெல் (Jadaan Fadhel) தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு: தேசிய குவைத் இராணுவம், உள்துறை அமைச்சு மற்றும் தீயணைப்புப் படை ஆகியன இணைந்து முழுமையான தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக குவைத் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

முன்னதாக, குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்திலுள்ள எரிபொருள் சேமிப்புத் தொட்டி ஒன்றின் மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

குவைத்தின் முக்கிய வர்த்தகத் துறைமுகத்தின் மீதும் அண்மையில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.