தெற்கு திசையில் இந்த 5 பொருட்கள் வைத்தால்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும்

 



வீட்டின் தெற்கு திசையில் குறிப்பிட்ட சில பொருட்களை வைத்தால் அவை பணத்தை காந்தம் போல ஈர்க்கும் தன்மை கொண்டது என கூறப்படுகின்றது.

வாஸ்து படி நமது வீட்டில் எங்கு என்ன வைத்தால் வீட்டில் வறுமை நீங்கி அமைதியும் சந்தோஷமும் பெருகி பணத்திற்கான வருமானமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இதன்படி பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு திசையை செல்வத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது. ஆனால் வீட்டின் தெற்குப் பக்கமும் பணத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வாஸ்து விளக்கி உள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த திசையில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்தால் அது வீட்டிற்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அளவற்ற செல்வத்தைக் கொண்டு வரும் என கூறப்படுகின்றது. அந்தப் பொருட்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். 

வாஸ்து சாஸ்திரத்தில், ஃபீனிக்ஸ் பறவையானது வெற்றி, புகழ் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. அதன் படத்தை தெற்கு நோக்கிய சுவரில் வைப்பது முன்னேற்றத்திற்கான பாதையைத் திறந்து, செல்வத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஜேட் செடி (Crassula ovata) 

ஒரு கூடம் அல்லது வரவேற்பறையின் தெற்கு திசையில் ஜேட் செடி (Crassula ovata) செடியை வைப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்தச் செடி செல்வத்தை ஈர்க்க பயன்படுகிறது.