கோவை உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மேம்பாலத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகக் கூறும் பொதுமக்கள், வேகக் கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
