சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க


 

சொகுசாக இருந்து கொண்டு அதிக பலனை அனுபவிக்க நினைக்கும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்களின் குணாதிசயங்களை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் நிலையும், ஒருவரது ராசியும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிலர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் சிலர் வேலை செய்வதை விட அதிகமாக ஓய்வெடுப்பதையே விரும்புவார்கள். ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில கிரகங்களின் ஆதிக்கமும், ராசியின் தன்மையும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

சில ராசியினரின் செயல்களை சோம்பேறித்தனம் என்று கூறுவதை விட அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறை என்றே கூற வேண்டுமாம்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினர் அதிகமாக ஓய்வெடுக்க விரும்புவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

சுக்கிரனை அதிகபதியாக கொண்ட ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பதை விட சொகுசு வாழ்க்கையை தான் அதிகம் விரும்புகின்றனர்.

இவர்களால் அவசரமாக வேலை செய்ய முடியாது. தங்களுக்கு பிடித்த சூழலில், சௌகரியமாக அமர்ந்து மெதுவாக வேலை செய்யவே ஆசைப்படுவார்கள்.

இவர்களின் இந்த செயல் சோம்பேறித்தனம் கிடையாதாம். வாழ்க்கையை நிதானமாக ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என்று கூற வேண்டும்.

கடகம்

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்தவராக இருப்பார்கள். இவர்களுக்கு தங்களது வீடு மற்றும் படுக்கையறை தான் உலகத்திலேயே மிகப்பிடித்த இடமாகும்.

வெளியில் சென்று போராடுவதைவிட, வீட்டிற்குள் முடங்கி ஓய்வெடுப்பதையே அதிகம் விருப்புவார்கள். மனரீதியாக மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதால், மன அழுத்தம் ஏற்படும் போது தங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டு செயலற்று அமர்ந்துவிடுவார்கள்.

சிம்மம்

சூரியனை அதிகபதியாக கொண்ட சிம்ம ராசியினர் தலைவராக்கத் தகுதியானவர்கள் ஆவர். களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கடும் தயக்கம் இருக்கும் என்றாலும், கட்டளையிட்டு வேலை வாங்குவதை அதிகம் விரும்புவார்கள்.

தங்களது உழைப்பை கொண்டு வேலை செய்வதை விட, புகழ், அங்கீகாரத்தை தான் அதிகம் பெற நினைப்பார்கள். பார்ப்பதற்கு மிகவும் சோம்பேறி போலவே காணப்படுவார்கள்.

மீனம்

குருபகவானின் ஆதிக்கம் பெற்ற மீன ராசியினர் எப்போதும் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நிஜ உலகத்தின் கடமை, பொறுப்பு இவற்றினை எதிர்கொள்வதற்கு தயங்கி தூக்கத்திலும், பகல் கனவிலும் நேரத்தை கழிப்பார்களாம்.

செயல்திறனை விட சிந்தனைத் திறன் இவர்களிடம் அதிகமாக இருப்பதால், உடல் உழைப்பு தேவைப்படும் இடங்களில் சட்டென்று பின்வாங்கி, ஓய்வெடுக்கத் தொடங்கி விடுவார்கள்.    


Post a Comment