இந்த நிலையில் புதுப்பித்துக் கட்டப்படும் கோவில் கட்டிடமானது தனது வீட்டுக்கும், தெருவுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்படுவதாகவும், எனவே, கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜி.பி.முத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கினார். இதையடுத்து கோவில் கட்டுமான வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஜி.பி.முத்து தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சிலர் நுழைந்து தகராறு செய்ததாகவும், அதனை தட்டிக்கேட்டபோது, அந்த நபர்கள் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியதாகவும் ஜி.பி.முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முகத்தில் ரத்த காயத்துடன் பேசிய ஜி.பி.மூத்து, தன்னை தாக்கியவர்கள் தனது மகள்கள் குறித்து ஆபாசமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
